சீரற்ற கால­நி­லை­யினால் 29 மாண­வர்கள் உயி­ரி­ழப்பு – கல்வி அமைச்சர்

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்­ளப் ­பெ­ருக்கினால் 29 பாடசாலை மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கல்வி அமைச்சர் அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

மேலும் அதி­க­மான பாட­சாலை மாண­வர்கள் தங்க­ளது உட­மை­க­ளையும் பாடப்­புத்­த­கங்­க­ளையும் இழந்­துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் தொடர்ந்து கருத்து வெளி­யி­டு­கையில்;

நாட்டில் கடந்த இரு வாரங்­க­ளாக நில­விய சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட கடும் மழை, வெள்­ளப்­பெ­ருக்கின் கார­ண­மாக பாட­சாலை மாண­வர்கள் தங்­க­ளது உட­மை­க­ளையும் பாடப்­புத்­த­கங்­க­ளையும் இழந்­துள்ள நிலையில் அவர்­களின் கல்வி செயற்­பா­டுகள் முற்று முழு­வ­து­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இது வரை வெள்­ள­பா­திப்­புக்கள் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்­க­ளினால் 28 பாட­சாலை மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கல்வி அமைச்­சுக்கு தகவல் கிடைக்க பெற்­றுள்­ளது.

இந்த உயி­ரி­ழப்­பா­னது அதி­க­ளவு கொழும்பு மாவட்டம் உட்­பட சப்­ர­க­முவ மாகா­ணத்­தி­லேயே பதி­வா­கி­யுள்­ளது.

குறிப்­பிட்டு கூறு­வ­தாயின் கொழும்பு மாவட்­டத்தில் பாட­சாலை மாணவர் ஒரு­வரும் சப்­ர­க­முவ மாவட்­டத்தில் 28 பேரு­மா­கவே இந்த உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை பதி­வா­கி­யுள்­ளது.

இத­னி­டையே இந்த அனர்த்தம் கார­ண­மாக நாட­ளா­விய ரீதயில் 100 இற்கும் மேற்­பட்ட பாட­சா­லைகள் முற்று முழு­வ­து­மாக சேத­ம­டைந்­துள்­ளன. இவ்­வாறு பாதிப்­ப­டைந்த பாட­சா­லை­களை மீளவும் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலமே மாண­வர்­களின் கல்வி செயற்­பா­டு­களை உரி­ய­வ­கையில் முன்­னெ­டுக்க முடியும்.

இவ்­வா­றான நிலையில் கல்வி அமைச்சின் கீழ் பாதிக்­கப்­பட்ட மாண­வர்கள் தொடர்­பி­லான முழு­மை­யான தக­வல்­களை திரட்­டவும் நிவா­ரண செயற்­பா­டு­களை துரி­த­மாக முன்­னெ­டுக்­கவும் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்­கப்­பட்ட நிவா­ரண குழு­வா­னது பாதிப்­புக்கள் தொடர்­பி­லான முழூமையான தகவல்களை திரட்டி வருகின்றது.

அந்தவகையில் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களுக்கான அனைத்துவிதமான பாடப்புத்தகங்கள், புதிய சீருடைகள், சப்பாத்துக்கள், உட்பட சான்றுதல்கள், பெருபேறு சான்றுதல் என்பன உரிய முறையில் மாணவர்களுக்கு மீண்டும் பெற்றுதர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -