பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய ஒருவர் விளக்கமறியலில்...!

எப்.முபாரக்-
திருகோணமலை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அடித்து காயப்படுத்திய நபர் ஒருவரை அடுத்தமாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா இன்று செவ்வாய்கிழமை (26) உத்தரவிட்டார். 

திருகோணமலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 51வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உப்புவெளி பொபொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியை நீண்ட காலமாக காதலித்து வந்ததோடு இரவு வேளைகளில் சந்தித்தும் வந்துள்ளார் இந்த விடயம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரியவந்ததையடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதால் சந்தேகநபர் பொலிஸாரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்தசந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் திங்கட்கிழமை (25)கைது செய்து இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -