இந்தியாவின் உத்திரபிரதேச அசாம்கிராஹ் முபாறக்பூர் பிரதேசத்தில் அல்குரான் பிரதியில் பேப்பர் பிளேட் சந்தைக்கு விடப்பட்டுள்ளதால் அங்குள்ள முஸ்லீம்கள் கொதிப்படைந்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிப்பு பண்டம் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இந்த பேப்பர் பிளேட்டில் இனிப்பு பண்டங்கள் பறிமாறப்படுவது கண்டு ஆத்திரமடைந்த ஒரு இளைஞர் கடை நிருவாகத்துடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஊர்வாசிகள் சிலர் அந்த கடைக்கு தீ வைத்துள்ளதுடன் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடயை கடைக்காரரை பொலிஸார் கைது செய்ததுடன் வன்முறையில் ஈடுபட்ட இரு ஆர்பாட்டக்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாரதீய ஜனாதா கட்சி ஆட்சியில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கு அதிகரிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.