இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா சிகிச்சை முடிந்து வௌியேறினார்...!

ல்லேகல விளையாட்டரங்கில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை தலையில் பந்து பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா சிகிச்சை முடிந்து வௌியேறியுள்ளார். 

கடந்த 24ம் திகதி காயமடைந்த அவர், விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், கௌஷல் சில்வா சிகிச்சை முடிந்து வௌியேறியுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்தியக் குழு பிரதிநிதி வைத்தியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போது ஓய்வில் இருக்கும் அவர் இன்றும் சில நாட்களில் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீள பயிற்சிக்கும் திரும்புவது எப்போது என, இலங்கை கிரிக்கெட் சபை பின்னர் அறிவிக்கும் எனவும் அர்ஜூன டி சில்வா மேலும் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -