சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக கார் விபத்து...!

க.கிஷாந்தன்-
ட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

30.04.2016 அன்று சனிக்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காரில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -