ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சிங்கள ராவய முறைப்பாடு...!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சிங்கள ராவய தேசிய அமைப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது. 

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியே இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

களுத்துறை போதிக்கு அருகில் பிக்குகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட பேரணி குறித்து சட்ட நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிங்கள ராவய எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -