நால்வருக்கு அதிகமானோரை முச்சக்கரவண்டியில் ஏற்ற முடியாது..!

நான்கு பேருக்கு அதிக எண்ணிக்கையானோரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

முச்சக்கரவண்டிகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் சந்தர்ப்பங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழப்பதாக, வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனப் போக்குவரத்து தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்

இவ்வாறு அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று நேற்று பண்டாரகமயில் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்

கடந்த வருடத்தில்முச்சக்கரவண்டி விபத்துக்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களுள் 23 பேர் ஐந்து வயதுக்கு குறைவானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -