ஹோமாகம நீதிமன்றில் கலகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 பேர் பிணையில் விடுதலை..!

ஹோமாகம நீதிமன்ற திடலில் கலகம் ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டது தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 பேர் இன்று பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஒருவருக்கு தலா 5 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகம நீதவான் ரங்க திஸா நாயக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் , ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்துக்குரிய இத்தேகந்தே சந்தாதிஸ்ஸ தேரர் , சிங்க ராவய அமைப்பின் செயலாளர் வணக்கத்துக்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் உள்ளிட்ட 6 தேரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் , சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்டுள்ள மேலும் 5 பேர் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -