சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் அனைத்து பாகங்களிலும் ஏற்பட்டிருந்த மின்சாரத் தடைக்கு, அவதானமின்மையே காரணம் என்று, மின்சார சக்தி தொடர்பான நிபுணர் பேராசிரியர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, நேற்று இரவும் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது சீராக்கப்படும் வரையில் இவ்வாறான மின்சார தடைகள் ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை முடிந்த அளவு சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபை பொது மக்களை கோரியுள்ளது.
தற்போதும் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
