உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பல மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போது, திரும்பி போ என்று மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஹைதராபாத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் மோடி மௌனம் சாதித்து வருவதால் அவருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
