வெள்ளிக்கிழமை இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுகீட்டின்மூலம் முள்ளிபொத்தானை 10ம் கொலனி மைய்யவாடி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திறந்து வைத்தார்.
மேலும் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் ஜெயவிஷ்ணு வழிகாட்டலுடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் முதாலாவது ஆண்டு நல்லாட்சி நிறைவினை முன்னிட்டு மாகாண சபை உறுப்பினரால் மர நடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் பல்வேறு சங்கங்களை பிரதிநிதித்துவபடுத்தும் உறுப்பினர்களும் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டதுடன் மாகாண சபை உறுப்பினரின் தம்பலகாமம் பிரதேசத்துக்கான இணைப்பாளர் அயூப்கான் ஆசிரியரும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


