எஸ்.எம்.சன்சீர்-
அம்பாறை, கல்முனை சாஹிப் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
தங்க வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வீட்டிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத் தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால், வீட்டின் முன்பகுதியும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.