சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றுமொரு சவூதி பணிப்பெண்னின் மரணம்..!

வூதி அரோபியாவிற்கு பணிக்காக சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமான பெண் ஒருவரின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அவிசாவளை – புவக்பிட்டி – ப்ரகதிபுர பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய கனேஷலிங்கம் கிருஷாந்தி என்ற யுவதியின் மரணம் சந்தேகத்துக்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சவூதி அரோபியாவிற்கு பணிக்காக சென்றுள்ளார்.

கடந்த மே மாதம் நாட்டிற்கு வருகை தருவதாக கிருஷாந்தியால் அவரது தாயிடம் கூறப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கிருஷாந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவர் பணியாற்றிய தொழில் முகவர் நிலைய அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், 6 மாதங்களின் பின்னரே அவரது சடலம் நாட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -