அகில இலங்கை உதைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு எப்.சீ அணி சம்பியன்!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான்-

கில இலங்கை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு எப்.சீ.அணிக்கும், இராணுவ அணிக்குமிடையில் இன்று (05) சனிக்கிழமை விளையாட்டுத்துறைஅமைச்சின் மைதானத்தில் இடம்பெற்றது.

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் கொழும்புஎப்.சீ அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டி நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், டயலொக் நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஹான் விஜயசூரிய ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டுபரிசில்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -