மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் திறப்பு விழா..!

இக்பால் அலி-
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊடாக எண்ணற்ற வேலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைக்கப் பெற்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. நாங்கள் நன்கு யோசித்து குறுகிய 100 நாட்களுக்குள் கிராம மட்டங்ளில் முடிந்தளவு பயன்படுத்திக் கொண்டதை நாங்கள் பார்த்தோம். 

அந்த வகையில் விளையாட்டு மைதானம் அதேபோல இந்த தொகுதியெங்கும் சென்றால் பராமுகமாக இருந்த விஹாரை, பாதை, நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல பொது மக்களுக்குத் தேவையான வேலைப் பணிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிகக்ப்பட்டது. இந்த வேலைத் திட்டத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டமை பொது மக்களின் வெற்றியாகும் என்று பொது நிர்வாகத் துறை அமைச்சரும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியில் முன்னாள் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் 40 இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு மைதானம் திறப்பு விழா அதிபர் எம்.டி.எம். நிஸ்தார் தலைமையில் 04-12-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொது நிர்வாகத் துறை அமைச்சரும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

எனவே மக்களுக்கு தேவையான விடயங்களைக் கருத்திற் கொண்ட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்தவகையில் எமது நிதி ஒதுக்கீடுகள் மக்களுடைய தேவையை மையமாகக் கொண்டே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நாங்கள் எதிர் பார்க்கின்றோம். 

எமது பிரதமர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேடமாக எங்களுக்கு தெளிவுபடுத்தினார். நாடு முழுவதும் நடைபெறும் வேலைப் பணிகள யாவும் சமமான முறையில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும் என முன்வைத்துள்ளார். கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் காலத்தைக எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட நபருடைய பொருளாதார வருமானத்தை கொண்டதாகப் பேசப்பட்டது. 

ஒரு தனி நபருடைய வருமானம் டொலர் 4000 ரூபா எனப் பேசப்பட்டது. இந்த கிருங்தெனிய மக்களிடையே ஒரு தனி நபரின் வருமானம் டொலர் 4000 ரூபா இருக்குமா ? இந்த வருமான எல்லோருக்கு இருக்குமா? குறித்த தனிப்பட்ட நபர்களிடத்திலே இந்தப் பொருளாதார வருமானம் குமிந்து இருந்தது. இவைகளுக்கு மேலாக இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் சமமான முறையில் பொருளாதார வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற வகையிலே இந்தப் புதிய வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நாட்டில் சகல மக்கள் மத்தியிலும் ஏற்றத் தாழ்வின்றி பணம் புழக்கம் ஏற்படும் வகையில் இந்த புதிய வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. திறந்த பொருளாதாரத் துறைக்குத் தந்தையான ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்திற்குப் பிற்பாடு இந்த நாட்டிலுள்ள சகல மக்களையும் பொருளாதார ரீதியாக கட்டி எழுப்புவதற்காக முன் வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விசேடமாக கரப்பந்தாட்டக் கண்காட்சியும் இடம்பெற்றதுடன் இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -