விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!

எம்.எம்.ஜபீர்-
ற்பிட்டிமுனை பிரதேசத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் அயராத முயற்சியினால் அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்திற்கு மீன்பிடி வலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மண்வெட்டி உபகரணங்கள் 64 குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு அல்-அக்ஷா பாடசாலையின் மக்கள் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.நஸீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் நற்பிட்டிமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு அமைப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.இப்றாகீம், கல்விமான் மன்சூர் ஏ. காதர், நற்பிட்டிமுனை கஸ்வா சமுக சேவை அமைப்பின் தலைவர் ஏ.கே.நூர்தீன், அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.நிரோஸ், மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -