முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து..!

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு அட்டன் பிரதான வீதியில் கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் செனன் பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

11.12.2015 இன்று காலை 05.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிக வேகமாக செலுத்தியதாலேயே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், எனினும் சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -