ஒன்பது கிலோ மான் இறைச்சியோடு மாட்டியவருக்கு 30,000 ரூபாய் அபராதம்..!

எப்.முபாரக்-
மூதூர்- இரால்குழி பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி 9 கிலோ கிராம் மான் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றம் 30,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பிரிதொரு நபரின் மோட்டார் சைக்கிள் என்பதால் மோட்டார் சைக்களில் உரிமையாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை ஒன்றில் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன், ஜனவரி மாதம் 1ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மூதூர் நீதிமன்ற நீதிவான் ஜ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -