மனைவியையும் வீட்டையும் எரிப்பதற்கு முற்பட்டவர் விளக்கமறியலில்..!

செய்தியாளர்-எப்.முபாரக் 
திருகோணமலை பிரதேசத்தில் தனது மனைவியையும் வீட்டையும் மண்ணெனை ஊற்றி எரிப்பதற்கு முயற்சி செய்த சந்தேக நபயொருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் சந்தேக நபர் மனைவியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சாராயம் குடித்துக்கொண்டு சனிக்கிழமை (14) இரவு வீட்டுக்குச் சென்று மனைவியையும், வீட்டையும், மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பதற்கு முற்பட்ட போது மனைவி கூக்குரலிட்டு சத்தமிட்டதால் அயலவர்கள் ஓடி வந்து குறித்த சந்தேக நபரின் மனைவியை காப்பாற்றியுள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரை மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் 39 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -