திருகோணமலை பிரதேசத்தில் தனது மனைவியையும் வீட்டையும் மண்ணெனை ஊற்றி எரிப்பதற்கு முயற்சி செய்த சந்தேக நபயொருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் சந்தேக நபர் மனைவியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சாராயம் குடித்துக்கொண்டு சனிக்கிழமை (14) இரவு வீட்டுக்குச் சென்று மனைவியையும், வீட்டையும், மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பதற்கு முற்பட்ட போது மனைவி கூக்குரலிட்டு சத்தமிட்டதால் அயலவர்கள் ஓடி வந்து குறித்த சந்தேக நபரின் மனைவியை காப்பாற்றியுள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் 39 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
