வரவு செலவுத்திட்டத்தில் தேநீர் விருந்தைப் புறக்கணித்தார் மஹிந்த : காரணம்

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புறக்கணித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நாட்களில் நிதியமைச்சின் சார்பில் தேநீர் விருந்தொன்று வழங்கப்படுவது வழக்கமாகும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி இந்த தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இந்த வழக்கத்தின் பிரகாரம் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இதனைப் புறக்கணித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -