கண்டி மேயராகப் பதவி வகித்த மஹேன் ரத்வத்தை இன்று திடீர் ராஜினாமா..!

ண்டி மேயராகப் பதவி வகித்த மஹேன் ரத்வத்தை இன்று தனது பதவியிலிருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள கண்டி விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக நிலமே பதவிக்கு போட்டியிடுவதற்காகவே தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக நிலமேயாக கடமையாற்றிய மொஹான் பானபொக்கே அண்மையில் காலமானதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பரில் புதிய பஸ்நாயக நிலமே தெரிவு செய்யப்படவுள்ளார்.

இப்பதவியை அடைந்து கொள்ளும் நோக்கில் மேயர் பதவியை ராஜினாமாச் செய்துள்ள மஹேன் ரத்வத்தை, தனது ராஜினாமா குறித்து மாநகர மேயர் மற்றும் சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஆகியோருக்கும் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -