இனத்தின் மதத்தின் பெயரிலுள்ள கட்சியை தடை செய்க..!

னம் அல்லது மதம் என்பவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படும் அரசியல் கட்சிகள், தமது பெயர்களை மாற்றாவிடின், அவற்றின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கேரி முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

இனம், மதம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெயரிடப்பட்டுள்ள 20 கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் முன்வைத்துள்ள மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இது தொடர்பான விசாரணையை தள்ளிப் போட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -