குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்பத்தில் தனது செயலாளராக செயற்பட்ட சம்பிக்க கருணாரத்ன நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் பிரித்தானியா மற்றும் இலங்கைக்கான கடவுச்சீட்டுகள் இரண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தின் அதிகாரியாகவும் தேசிய லொத்தர் சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் 3 அரசாங்க நிறுவனங்களில் சம்பளம் பெற்றுக்கொண்டமையினாலே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஊடகங்களினால் �கப்பம் சம்பிக்க� லஞ்சம் சம்பிக்க என கூறப்பட்டவரும் அவர் என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்களினால் தெரியவந்துள்ளது.
கப்பம் சம்பிக்க துறைமுகத்தில் ஜனாதிபதி இணைப்புச் செயலாளராக சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், பெரிய அளவிலான ஹெரோயின் மற்றும் எத்தனால் கொள்கலன்களை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளாமல் நாட்டிற்குள் அனுப்பி வைப்பதே அவரினால் மேற்கொள்ளப்படுகின்ற கடமையாகும்.
அதற்காக சுங்க பிரிவை பயன்படுத்திக் கொண்டதாகவும், முன்னாள் சுங்க பிரிவின் பணிப்பாளர் நாயகத்தின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.