அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை..!

நுகர்வுப் பொருட்கள் பலவற்றுக்கு அதிகபட்ச விற்பனை விலையை தீர்மானிக்க கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வகையில், மைசூர் பருப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 190.00 ரூபாவாகவும், உருளைக் கிழங்கு 1 கிலோ 145.00 ரூபாவாகவும், பீ. வெங்காயம் 1 கிலோ 155.00 ரூபாவாகவும், தோல் நீக்கிய கோழி இறைச்சி 1 கிலோ 480.00 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட கோதுமை மாவு 1 கிலோ 95.00 ரூபாவாகவும், காய்ந்த கொச்சிக்காய் 1 கிலோ 355.00 ரூபாவாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய சில்லறை விற்பனை விலை நேற்று (18) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -