தொப்பிகல பிரதான வீதி மீண்டும் வெள்ளத்தில் - போக்குவரத்திற்காக இயந்திரப்படகுச்சேவைகள்

ஏ.எம்.றிகாஸ்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் - தொப்பிகல பிரதான வீதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து பொதுமக்களின் போக்குவரத்திற்காக இயந்திரப்படகுச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிரான் தொடக்கம் புலிபாய்ந்தகல் பிரதேசம் வரைக்குமான சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் இப்படகுச்சேவை நடைபெறுகிறது.

மூன்றுபடகுகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இப்படகுகளிலேயே பயணம் செய்கின்றனர்.

கிரான் பிரதேச செயலகம் மற்றும் தொப்பிகல இராணுவம் இணைந்து இப்படகுச் சேவையை நடாத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக இவ்வீதி வெள்ளத்தில் மூழ்கியள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -