எம்.ஏ. தாஜகான்-
மனித உரிமைகள் அமைப்பின் பொத்துவிலுக்கான கிளை இன்று உத்தியோகபூர்வமாக மனித உரிமைஅமைப்பின் பொத்துவில் பணிப்பாளர் Dr.AM.வஸீம் அக்ரம் இன் இல்லத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Dr.MNM அஸீம் மற்றும் ஏனைய மாவட்ட மாகாண பணிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் MS.அப்துல் வாஸீத் மற்றும் வைத்திய அதிகாரி Dr.MMM.சமீம் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல்மலிக், மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


