திருகோணமலை மாவட்டத்தில் வீடமைப்புக்கான காசோலை வழங்கள்..!

எப்.முபாரக்- 
வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 25 வீடமைப்பு திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசத்திற்குறிய வீட்டு திட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவின் தோப்பூர் இக்பால் நகரில் அமைக்கபடவிருக்கின்றது. 

இவ் வீடமைபிற்கான ஆரம்ப கொடுப்பனவுக்குரிய காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

பிரதேசசெயலாளர் திரு. யூசுப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப கொடுப்பனவுக்குரிய காசோலையை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். 

இந் நிகழ்வில் பா.உ.இம்ரான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன, வீடமைப்பு அதிகாரசபை மாவட்ட முகாமையாளர் திரு. திருமாறன் ஆயோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -