பள்ளிவாசல் மற்றும் மத்ரசா ஆசிரியர்களுக்கு அரச சம்பளம் வழங்கப்படுவதை வலியுறுத்து முகமாக உலமா கட்சியால் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர் வரும் 25ந்திகதி புதன் கிழமை இரவு எட்டு மணிக்கு உலமா கட்சியின் நிர்வாக செயலாளர் மௌலவி அஸ்ஹர் பாக்கவியின் இல்லத்தில் மேற்படி கருத்தரங்கு நடைபெறும்.
இதில் கொழும்பு மாவட்டத்தல் உள்ள பள்ளிவாயல் இமாம்கள், மத்ரசா அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி வேண்டப்படுகிறார்கள். வருபவர்கள் முன் கூட்டியே தமது வரவு பற்றி 0777570639 எனும் இலக்கத்துக்கு தகவல் அனுப்பும்படி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
