மீரியபெத்தையில் மீண்டுமொரு பாரிய மண் சரிவு அபாயம் - குடியிருப்பாளர்கள் அவசரகதியில் இடமாற்றம்

துளை மாவட்டத்தின் மீரியபெத்தையில் மீண்டுமொரு பாரிய மண் சரிவு அனர்த்தம் குறித்து இன்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று மாலை நேரத்தில் மீரியபெத்தை பகுதியில் கொட்டிய பயங்கர மழையானது ஒரு மணித்தியாலத்துக்கு நூறு மில்லிமரிலும் பார்க்க அதிகளவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாகவே அப்பகுதியில் மீண்டுமொரு மண்சரிவிற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பிரதேசத்தில் வசித்த 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று மாலை அவசர கதியில் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெல்லவாய- கொஸ்லாந்தை பிரதான பாதையின் மூன்று இடங்களில் மண்சரிவு காரணமாக தற்போது அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹல்தும்முல்லை , அமுபிடிகந்த, தியகல பிரதேசத்தில் வசித்த 60 குடும்பங்களும் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் கொஸ்லாந்தை , மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தம் காரணமாக சுமார் 30 பேர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -