அவன்ட்கார்ட் தலைவருக்கு அழைப்பாணை..!

வன்ட்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நாளை ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வர்த்தக நிறுவனமான ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பவற்றை அவன்ட் கார்ட் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நிஸ்ஸங்க சேனாதிபதி நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவண்ட்கார்ட் கப்பலில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் உள்நுழைந்து விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -