எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆதரவு - பான் கீ மூன்

திர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஆதரவு வழங்கி இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் மேலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -