வீட்டுத்திட்டத்தில் மக்கள் குடியமராமையினால் இவ்வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள்..!

எப்.முபாரக்-
திருகோணமலை, மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் ,சாந்திபுரம் மற்றும் ரொட்டவௌ பகுதிகளில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் மக்கள் குடியமராமையினால் இவ்வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல வருட காலங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும் நிரந்தர வீட்டுத்திட்டம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசினால் கட்டப்பட்ட பல வீடுகள் பாழடைந்து காணப்படும் நிலையில் இதுவரை எவரும் அங்கு குடியமர்த்தப்படாதுள்ளதால் அவ்வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் மொறவௌ பிரதேச செயலாளர் டப்ளியூ. வாத்திய விஜயந்தவிடம் வினவியபோது,

வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருக்காமல் பாதுகாப்பற்ற விதத்தில் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் அதனையும் மீறும் பட்சத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அவ் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -