9 இல் கல்வி கற்கும் 9 மாணவர்கள் கைது...!











 க.கிஷாந்தன்-
லவாக்கலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவந்த 9 மாணவர்களை தலவாக்கலை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். 

மேற்படி பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனாதாக கூறப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி மென்பொருள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரிலே மேற்படி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பாடசாலை அதிபர் செய்த முறைப்பாட்டுக்கமைய இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இவர்களது வீடுகளிலிருந்து கணினி மென்பொருட்கள் பலவற்றையும் மீட்டுள்ளனர். 

இம்மாணவர்களை நாளை வியாழக்கிழமை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -