பொத்துவில் அறுகம்பை களப்பில் ஆண் ஒருவரின் சடலம்..!

சம்சுல் ஹுதா-

பொத்துவில் அறுகம்பை களப்பில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மு.ப.3.00 

மணியளவில் குறித்த களப்பில் மிதந்து காணப்பட்டதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொத்துவில் நீதவான் நீதிமன்ற 

நீதிபதி ஐ.பயாஸ் றசாக் முன்னிலையில் பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டது. குறித்த சடலம் கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 

சுப்ரமணியம் என அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் 

தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -