குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் 75 பேர் இடம்பெயர்வு..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா கிளாரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் 24.09.2015 அன்றுவியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பெய்த கடும்மழை காரணமாக குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆற்றுநீர் பெறுகெடுத்ததால் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் 15 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். பெய்த மழை காரணமாக பெறுமதி மிக்க சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

இதே வேளை குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் கூரைத்தகடுகள் சேதமடைந்து காணப்படுவதால் மழைநீர் வீட்டினுள் வடிவதாக இவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -