இவரைக் கண்டுபிடிக்க உதவினால் ரூ.5 இலட்சம் சன்மானம் கிடைக்கும்

ஜா-எல பகுதியிலுள்ள நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையரை இனங்கண்டு தங்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நகை கடை உரிமையாளரால் 5 இலட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று ஜா-எல பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி, ஜா-எல பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணிபுரிந்த இரண்டு பெண்களை கத்தி முனையால் மிரட்டி, அங்கிருந்த 6 இலட்சம் ரூபாய் பணத்தையும் 53,760,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், இவ்வாறு கொள்ளையடித்தவர்களின் அடையாளம், நகைக்கடைக்கும் அருகில் இருந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.கமராவில் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு தற்போது நகைக்கடை உரிமையாளரும் பொலிஸாரும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வழங்கப்பட்டுள்ள புகைப்படத்திலுள்ளவர்களை இனங்கண்டு அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தகவல் தரவேண்டிய அலைபேசி இலக்கங்கள்:
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் - 071-8591589 
உதவி பொலிஸ்மா அதிபர்- களனி- 071-8591594 
பொலிஸ் ஊடகப்பிரிவு -011-2327227 
ஜா-எல பொலிஸ் நிலையம்- 011-2236222, 011-2239131 
 ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071-8591603 
குற்றப்பலனாய்வு தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி -078-538291
த.மி.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -