யாழ்ப்பாணத்தில் கடந்த 3 வருடங்களில் 167 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவு

அஸ்ரப் ஏ சமத்-

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 வருடங்களில் 167 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும், 2014ம் ஆண்டு 69 துஷ்பிரயோக சம்பவங்களும், 2015ஆம் ஆண்டு ஐூன் மாதம் வரை 27 துஷ்பிரயோக சம்பங்களும், பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 167சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் இளம் வயது திருமணம் மற்றும் இளவயது கர்ப்பம் என்பன தொடர்பில் கடந்த 2013ம் ஆண்டு 104 சம்பவங்களும், 2014ம் ஆண்டு 83 சம்பவங்களும், 2015ம் ஆண்டு ஐூன் மாதம் வரை 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வி.கௌதமன் தெரிவித்தார்.

மேலும், யாழ் மாவட்டத்திலே கடந்த 2009 ம் ஆண்டு ஆயிரத்து 17 சிறுவர்களும் 2014ம் ஆண்டு ஆயிரத்து 71சிறுவர்களும் 2015ம் ஆண்டு ஐனவரி மாதம் வரை ஆயிரத்து 156 சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -