ஹிஸ்புல்லா, அதாவுல்லாவுக்கு தேசியப்பட்டியல்? சந்திரகாந்தன் பெயர் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண அரசியல் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியுற்ற ஒருவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் பெரும்பாலும் ஹிஸ்புல்லா அல்லது அதாவுல்லா தெரிவுசெய்யப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

எனினும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை மஹிந்த தரப்பு மட்டுமன்றி மைத்திரி தரப்பும் நிராகரித்துள்ளது.

இதற்கிடையே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியல் நியமனத்தை குருநாகல் டொக்டர் சாபி மற்றும் புத்தளம் நவாவி ஆகியோருக்கு தலா இரண்டரை வருடங்கள் வீதம் பிரித்து வழங்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் அக்கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீதின் தேசியப் பட்டியல் கனவு கலைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -