கைது செய்த சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது நீதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் யூ.கே.ஆதம் லெவ்வை என்பவர் தனது வாகனத்தில் நேற்று முன்தினம் மாலை அக்கரைப்பற்றில் இருந்து அட்டாளைச்சேனைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் அவரின் வாகனத்துக்கு முன்னால் சென்று வாகனத்தை வழி மறித்து வேட்பாளருக்கு மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்து அச்சுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் வேட்பாளர் தனது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் அச்சம்பவம் பதிவு செய்ததையும் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து்பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர். ஆஜர் படுத்திய போது நீதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.