ஐ.தே.கட்சி அம்பாரை மாவட்ட வேட்பாளரை அச்சுறுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

க்­க­ரைப்­பற்றில் வைத்து நேற்று  முன் தினம் வாக­னத்தில் சென்று கொண்­டி­ருந்த ஐக்கிய தேசிய கட்சி வேட்­பாளர் ஒரு­வரை வழி­ம­றித்து அச்­சு­றுத்­திய நப­ரொ­ரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்­தனர்.

கைது செய்த சந்­தேக நபரை நேற்று திங்­கட்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்­னி­லையில் ஆஜர் படுத்­திய போது நீதி­பதி எதிர்­வரும் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் திகாமடுல்ல மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிடும் யூ.கே.ஆதம் லெவ்வை என்­பவர் தனது வாக­னத்தில் நேற்று முன்­தினம் மாலை அக்கரைப்பற்றில் இருந்து அட்­டாளைச்சேனைக்கு சென்று கொண்­டி­ருந்த வேளையில் மோட்டார் சைக்­கிளில் சென்ற நபர் ஒருவர் அவரின் வாக­னத்­துக்கு முன்னால் சென்று வாக­னத்தை வழி மறித்து வேட்­பாளருக்கு மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்து அச்சுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அக்­க­ரைப்­பற்று பொலிஸில் முறைப்­பாடு செய்­த­துடன் வேட்­பாளர் தனது வாக­னத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கம­ராவில் அச்­சம்பவம் பதிவு செய்­ததையும் காண்­பித்­துள்ளார்.

இதனையடுத்து்பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர். ஆஜர் படுத்­திய போது நீதி­பதி எதிர்­வரும் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -