நாம் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை, மைத்திரிக்கே வாக்களித்தோம் - மஹிந்த

நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மந்த போசனமான பொருளாதாரத்தையே ரணில் அறிமுகம் செய்கின்றார். இதற்காகவா நாம் நல்லாட்சிக்கு வாக்களித்தோம்?.

இவர்களுக்கு நாம் வாக்களிக்கவில்லையே. நாம் மைத்திரபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம். பலவந்தவமாக வந்து இவர்கள் ஒட்டிக்கொண்டுள்ளார்கள்.

எந்தவிதமான பொறுப்பும் இன்றி ஆட்சி பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் மருந்து மாத்திரைகளையும் விட்டு வைக்கவில்லை. 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டவை இன்று 135 ரூபாவாகும்.

மருந்து மாத்திரையின் விலை உயர்வடைந்துள்ளது.

நோயாளியின் மருந்துகளை மக்களா திருடினார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சார மேடையொன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்த பேச்சின் மூலம் நல்லட்சியை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்துள்ளார்கள், தமது ஆட்சிக் காலத்தில் நல்லாட்சி காணப்படவில்லை என்பதனை மஹிந்த ஒப்புக்கொண்டுள்ளார் என்பதே மறைமுகமான உண்மையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -