அமைச்சர்கள் தேர்தலுக்கு அரச வாகனங்களை பாவித்தால் கட்டணங்கள் அறவிடப்படும்- ஜனாதிபதி

காபந்து அரசாங்கத்தின் (இடைக்கால அரசு) அமைச்சர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால், அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு அரச வாகனங்களை பயன்படுத்தினால், கட்டணங்களை அறவிட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்திருந்தார்.

அதேவேளை காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த காவற்துறையினர் அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -