இளைஞர்களை புதிய உலகத்துடன் இணைக்கப் போகிறாராம் - மகிந்த

ளைஞர்களை புதிய உலகத்துடன் இணைந்து கொள்ள புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக இளைய தலைமுறையினருக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒன்லைன் மூலம் இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.

அதேபோல் வெளிநாடு சென்று கல்வி கற்க விருப்பும் பிள்ளைகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க தேவையான பணம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -