தொற்றா நோய்கள் பற்றிய கருத்தரங்கும் இலவச பரிசோதனையும்!

நிஸ்மி அக்கரைப்பற்று-

தொற்றா நோய்கள் சம்பந்தமாக அக்கரைப்பற்று பிரதேச மக்களை விழிப்பூட்டும் நோக்கில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கும் தொற்றா நோய்கள் சம்பந்தமான இலவச பரிசோதனையும் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் பாளிகா மஹா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (06) இடம் பெற்றது.

சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்,ஏ.பாஸிலா, கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக சுகாதாரக் கல்வி அதிகாரி எஸ்.அப்துல் அஸீஸ், சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எச்.பௌமி, எம்.எச்.மிஹியார் மற்றும் ஈ.ரி.சலீம் ஆகியோர் கலந்து கொண்டு தொற்றா நோய்களான புற்று நோய், கொலஸ்ட்ரோல், நீரிழிவு விஷேடமாக பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்று நோய், இரத்த அழுத்தம் முதலிய நோய்கள் பற்றி விளக்கியதோடு, இந் நோய்கள் சம்பந்தமாக இலவச பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. 

சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர்களான எம்.எச்.மிஹியார்; ஈ.ரி.சலீம் ஆகியோர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -