நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி எரிவாயு சிலிண்டர்களை கொண்டு சென்ற லொறி விபத்து!

க.கிஷாந்தன்-

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி எரிவாயு சிலிண்டர்களை கொண்டு சென்ற லொறி ஒன்று இன்று பிற்பகல் 02.00 மணியளவில் நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் இரதலை குறுக்கு வீதியில் சமர்செட் பகுதியில் பிரதான வீதியை விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சாரதியும் மற்றொருவரும் படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -