கல்முனைக்குடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!

எஸ்.அஷ்ரப்கான்-

ல்முனைக்குடி-01 கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அப்பிரிவில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள், குர்ஆனை மனனமிட்டு அல்-ஹாபிஸ் பட்டம் பெற்றவர் என பலரை பாராட்டி கௌரவித்தலும், இப்தார் நிகழ்வும் நேற்று (07) மாலை கல்முனை ஆஸாத் பிளாஸாவில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு கடந்த 20 வருட காலத்திற்கும் மேலாக சேவை செய்து ஓய்வு பெற்ற கிராம சேவகர்களான ஏ.அப்துல் கபூர், எம்.ரீ.அப்துல் ஜப்பார் ஆகியோரும், ஓய்வு பெற்ற கல்விக் கல்லுாரி விரிவுரையாளர் எச்.எம். ஆதம்பாவா, அல்குர்ஆனை மனனமிட்டு அல்-ஹாபிழ் பட்டம் பெற்ற முஹம்மத் அஸ்வர் பின் ஆதம்பாவா, கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.எம்.எம்.எஸ். அஹமட் பாறுாக் மௌலானா ஆகியோர் அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதுபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிதாக கடமையேற்றுள்ள பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -