மு.காவின் பாலமுனை மத்திய குழுவினரின் தெரிவும், புணரமைப்பும்..!

அபு அலா -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவினருக்கும், அமைப்பாளருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சிக்கல் நிலைமையை போக்கும் முகமாக பாலமுனை மத்திய குழுவினரை மீண்டும் புணரமைக்கும் நிகழ்வு நேற்றிரவு (25) முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்றது.

பாலமுனை மாவட்ட வைத்தியசாலை அருகாமையில் இடம்பெற்ற இந்த மத்திய குழு அமைக்கும் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் முழக்கம் மஜீட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான பைசால் காசிம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர், மு.காவின் உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்.

குறிப்பிட்ட அதிதிகளின் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழு புணரமைக்கும் நிகழ்வு எவ்வித பிரச்சனைகளுமின்றி மிக சுமுகமான முறையில் தெரிவு இடம்பெற்றது.

கடந்த காலங்களில் பாலமுனை மத்திய குழுவில் அங்கம் வகித்த தலைவர் ஐ.எல்.சுலைமாலெப்பை, செயலாளர் எம்.ஏ.சதாத், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும், பாலமுனை அமைப்பாளர் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலுக்குமிடையில் ஏற்பட்ட பல கருத்து முரண்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட நபர்களை விலக்கி மிக அவசரமான முறையில் புதிய மத்திய குழு நிருவாகத்தினரை பாலமுனை அமைப்பாளர் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தெரிவு செய்து வந்ததை பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எதிர்த்து வந்தமையும், இந்த பிரச்சினையை போக்கும் முகமாகவே இந்த மத்திய குழுவினரை புணரமைக்கும் நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -