(மருதமுனை) அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளின் அவல நிலை!

எம்.எம்.ஜபீர்-

ருதமுனை பிரதேசத்தில் சுனாமியினால் முற்றாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேட்டுவட்டை பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 178 வீடுகளில் 100 வீடுகள் கையளிக்கப்பட்டு எஞ்சியுள்ள 78 வீடுகள் இதுவரை கையளிக்கப்படாத நிலையிலுள்ளதால் இப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்படி 78 வீடுகளும் பற்றைகளால் சூழப்பட்டு காடாக காட்சியளிப்பதனால் இரவு வேளைகளில் விசஜன்துக்களின் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு வாழும் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

அப்பிரதேசத்தில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் அவ்வீடுகள் சேதப்படுத்தப்படுவதாகவும் இதனால் இவ்வீடுகள் குடியிருப்புக்கு பொருத்தமற்றதாக மாறிவருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதமாயுள்ள வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக வழங்கி இப்பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை இல்லாமல் செய்யுமாறு கோரிக்கையும் விடுக்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -