குளவி தாக்குதலில் 4 பேர் பாதிப்பு...!

க.கிஷாந்தன்-
நுவெரலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தில் 05.07.2015 அன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த நான்கு ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான நான்கு பேரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -