அளுகோசு பதவிக்கு புதியவரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை!

வெற்றிடம் நிலவும் அளுகோசு (மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடும் தொழில்) பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் அளுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார். 

அதன்படி அடுத்த வாரமளவில் அளுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்புவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் கூறினார். 

இதற்கு முன்னரும் அளுகோசு பதவிக்கு நபர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் அவர்கள் பின் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.(ந)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -