பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த லொறி மீது அரந்தலாவ பொலிஸ் சோதனைச் சாவடி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (23) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லொறியில் மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மங்களகம பொலிஸார் குறித்த லொறியை நிறுத்தியுள்ளனர்.
லொறி நிறுத்தாது பயணித்ததால் அரந்தலாவ பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அறிவித்துள்ளனர். அரந்தலாவ பொலிஸார் லொறியை நிறுத்தி போதும் லொறி நிறுத்தப்படவில்லை. அதனால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதன்போது ஒருவர் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
லொறியில் பயணித்த ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் லொறியை மீட்கும் போது அதில் மாடுகள் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந)
